- 04 April, 2026
புது தில்லி: மார்ச் 1, 2026: பிப்ரவரி 28, 2026 அன்று வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் இந்திய குடிமக்களுக்கு உதவ, இந்திய அரசு தனது தூதரகங்கள் மூலம் பிரத்யேக அவசர உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தூதரகங்களுடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடிமக்கள் அமைதியாக இருக்குமாறும், அதிகாரப்பூர்வ ஊடகங்களகன் மூலம் உடனுக்குடன் தகவல்களைப் பெறுமாறும், தேவைப்படும் இடங்களில் உள்ளூர் தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடுகள் வாரியான அவசர உதவி எண்கள்:
பின்வரும் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் தொலைபேசி, புலனம் மற்றும் மின்னஞ்சல் வாயிலான உதவி அமைப்புகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளன:
கத்தார் (தோஹா),
உதவி எண்: 00974-55647502, cons.doha@mea.gov.in.
ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி / துபாய்),
உதவி எண்: 800-46342,
புலனம்: +971543090571,
pbsk.dubai@mea.gov.in / ca.abudhabi@mea.gov.in.
சவுதி அரேபியா (ரியாத் / ஜித்தார்),
கட்டணமில்லா எண்: 800-247-1234,
ரியாத் உதவி எண்: 00-966-11-4884697,
புலனம்: 00-966-542126748,
cw.riyadh@mea.gov.in.
பஹ்ரைன் (மனாமா),
உதவி எண்: 00973-39418071.
குவைத் (குவைத் நகரம்),
24×7 அவசர எண்: +965-65501946,
community.kuwait@mea.gov.in.
ஓமன் (மஸ்கட்),
சமூக கட்டணமில்லா எண்: 80071234,
புலனம்: +968 93577979,
தூதரக உதவி எண்: 24695981.
ஈரான் (தெஹ்ரான்),
தூதரக உதவி எண்கள்: +98 912 810 9115,
+98 912 810 9109,
+98 912 810 9102,
+98 993 217 9359.
உதவிக்கான கோரிக்கைகள், பயணம் குறித்த தெளிவுபடுத்தல்கள், ஆவணங்கள் தொடர்பான கவலைகள் அல்லது பிற அவசர விடயங்களுக்குப் பதிலளிக்க இந்த எண்கள் செயல்பாட்டில் இருப்பதோடு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து ஆதரவு:
வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்காக, இந்தியாவிலும் 24×7 உதவி எண்களை வெளியுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது:
கட்டுப்பாட்டு அறை: +91-11-23011954,
+91-11-23012292,
+91-11-23017160.
MADAD குடிமக்கள் உதவி எண் (கட்டணமில்லா எண்): 1800-11-3090.
அவசர காலங்களில் சரியான நேரத்தில் பதிலளிப்பதற்கு வசதியாக, இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கும் இடையே MADAD ஒருங்கிணைக்கிறது.
ஆலோசனை:
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய குடிமக்களை அரசு பின்வருவனவற்றைச் செய்ய ஊக்குவித்துள்ளது:
* வாய்ப்புள்ள இடங்களில் அந்தந்த இந்திய தூதரகத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
* அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மற்றும் இந்தியத் தூதரகங்கள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.
* உடனுக்குடன் தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ தூதரக இணையதளங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளைக் கண்காணியுங்கள்.
* எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் மற்றும் இணையத்தில் பரவும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
* அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல்கள் அல்லது சமூக ஊடகக் கணக்குகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் குடிமக்களை எச்சரித்துள்ளனர்.
* இந்திய தூதரகங்களின் அனைத்து முறையான தகவல்தொடர்புகளும் "@mea.gov.in" மற்றும் சரிபார்க்கப்பட்ட தூதரகக் கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றன.
தூதரக ஈடுபாடு:
முன்னெச்சரிக்கை வழிமுறைகளைச் செயல்படுத்தும் அதே வேளையில், அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் இந்தியா நெருக்கமான அரசு ரீதியாக ஈடுபாட்டைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது. பேச்சுவார்த்தை, பதற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு ஆதரவான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வளைகுடா பகுதிகள் முழுவதும் இலட்சக் கணக்கான இந்திய குடிமக்கள் வசித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை நிச்சயமற்ற காலங்களில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேவைக்கேற்ப கூடுதல் ஆலோசனை அறிவிப்புகள் வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக தொடர்பில் இருக்குமாறு குடிமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- கத்தோலிக்க கனெக்ட் நிருபர்
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP