image

மத்தியப்பிரதேசத்தில் தலித் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

புர்ஹான்பூர், மத்தியப்பிரதேசம் – ஜூன் 25, 2025: மத்தியப்பிரதேசம் புர்ஹான்பூர் மாவட்டத்தின் நேபா நகர் கிராமத்தில், ஜூன் 22 இரவு, நான்கு தலித் கிறிஸ்தவர்கள் மீது வலதுசாரி இந்து குழு தாக்குதல் நடத்தியது. மதமாற்றம் செய்ததாகக் குற்றம்சாட்டி அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை தாக்கினர்.


பாஸ்டர் கோகரியா சோலங்கி அவர்கள் வீட்டில் தங்கியிருந்தபோது, சுமார் 150 பேர் கொண்ட ஒரு கூட்டம் அங்கு நுழைந்து, அவரும் மற்ற மூன்று நபர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். மூன்று ஆண்களின் உடைகளை கழற்றிவிட்டு, அவர்கள் உள்ளாடைகளில் தெருக்களில் அச்சுறுத்தலோடு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், அருகிலுள்ள ஒரு கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் ஒரு இந்து சிலைக்கு முன் வணங்க வைக்கப்பட்டனர்.


இந்தக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரை தங்களுடன் தொடர்புடையவர் என தெரிவித்து விடுவித்து, மூவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மூவரும் ஜூன் 24 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க சட்ட உதவிகள் தொடரப்பட்டுள்ளன.


பாஸ்டர் சோலங்கி கூறுகையில், தாக்குதலாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் பக்கம் நின்றதாகவும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள், மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து, 12 தாக்குதலாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த ஒரு இந்து தம்பதியை தவறான சாட்சியம் அளிக்க வற்புறுத்தியதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.


கிறிஸ்தவ தலைவர்கள் தெரிவித்ததாவது, தலித் மற்றும் பழங்குடியின மக்களிடம் சமூக சேவை செய்பவர்களைத் தடுக்க, தவறான மதமாற்றக் குற்றச்சாட்டுகள் விரைவாக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகும். உரிய நீதியும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என பாஸ்டர் எச்சரிக்கை தெரிவித்தார்.


மத்தியப்பிரதேசத்தின் 7.2 கோடி மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வெறும் 0.27% மட்டுமே. பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் இந்த மாநிலத்தில், 21% மக்கள் தலித் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.


மூலம்: UCA News

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP