- 25 June, 2025
ராயகடா, ஒடிசா, ஜூன் 25, 2025 – ஒடிசாவின் ராயகடா மாவட்டம், காசிபூர் வட்டத்துக்குட்பட்ட பைகனகுடா கிராமத்தில், இடைசாதி திருமணத்தைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் குடும்பத்தினரை “சுத்திகரிப்பு” சடங்கின் ஒரு பகுதியாகக் கூட்டமாக தலைமுடியை வெட்ட கிராமத்தினர் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பட்டியல்சாதி ஆணை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் சமூகத்தால் புறக்கணிக்க பட்டனர்
அந்தப் புறக்கணிப்பை நீக்க, கிராமத்தினர் குடும்பத்தினர் “சுத்திகரிப்பு சடங்கு” நடத்த வேண்டுமென வற்புறுத்தினர். சடங்கை நடத்த மறுத்தால், சமூகத்திலிருந்து நிரந்தரமாகத் தள்ளிவைக்கப்படு வார்கள்ம எனவும் எச்சரித்தனர். இதனால் மன அழுத்தத்துக்குள்ளான குடும்பம், உள்ளூர் தெய்வத்திற்கு மிருகத்தை பலியிட்டு, பின் தலைமுடியைச் சவரக்கட்டியுள்ளனர்.
இந்தக் காட்சிகளைப் பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, பலத்த கண்டனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் தொடர்ந்து, காசிபூர் வட்ட வளர்ச்சி அலுவலர் விஜய் சாய் விசாரணை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிகாரி ஒருவரை சம்பவ இடத்துக்கு அனுப்பி, நிலைமையை ஆய்வு செய்யச் சொன்னார். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம், இன்றும் இந்திய கிராமப்பகுதிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் சமூக அழுத்தங்கள் நீங்காத குறுக்கெழுத்தாக அமைந்துள்ளது என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும், கிராம மக்கள் இடையிலும் தற்போது வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. வற்புறுத்தலில் ஈடுபட்டவர்களுக்கெதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மூலம்: தி சியாசத் டெயிலி (The Siasat Daily)
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP